சிறுவர் பாடல்கள் <body bgcolor="#FFFFFF">
 

 

சிறுவர் பாடல்கள்
 

Monday, March 07, 2005

கத்தரி வெருளி

நவாலியூர் சோமசுந்தரப்புலவர்

     கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று

          காவல் புரிகின்ற சேவகா! - நின்று

          காவல் புரிகின்ற சேவகா!

     மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்

          வேலை புரிபவன் வேறுயார்! - உன்னைப்போல்

          வேலை புரிபவன் வேறுயார்?



     கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல்

          காவல் புரிகின்ற சேவகா! - என்றும்

          காவல் புரிகின்ற சேவகா!

     எண்ணி உன்னைப்போல் இரவுபகலாக

          ஏவல் புரிபவன் வேறுயார்? - என்றும்

          ஏவல் புரிபவன் வேறுயார்?



     வட்டமான பெரும் பூசினிக்காய் போல

          மஞ்சள் நிற உறு மாலைப்பார்!- தலையில்

          மஞ்சள் நிற உறு மாலைப்பார்!

     கட்டியிறுக்கிய சட்டையைப் பாரங்கே

          கைகளில் அம்பொடு வில்லைப்பார்!-இரு

          கைகளில் அம்பொடு வில்லைப்பார்!



     தொட்டு முறுக்காத மீசையைப்பார்! கறைச்

          சோகிபோலே பெரும் பல்லைப்பார்! - கறைச்

          சோகிபோலே பெரும் பல்லைப்பார்!

     கட்டிய கச்சையில் விட்டுச் செருகிய

          கட்டை உடைவாளின் தேசுபார்! - ஆகா

          கட்டை உடைவாளின் தேசுபார்!



     பூட்டிய வில்லுங் குறிவைத்த பாணமும்

          பொல்லாத பார்வையுங் கண்டதோ ? - உன்றன்

          பொல்லாத பார்வையுங் கண்டதோ ?

     வாட்ட மில்லாப்பயிர் மேயவந்த பசு

          வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே - வெடி

          வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே



     கள்ளக் குணமுள்ள காக்கை உன்னைக்கண்டு

          கத்திக் கத்திக் கரைந்தோடுமே - கூடிக்

          கத்திக் கத்திக் கரைந்தோடுமே

     நள்ளிரவில் வருகள்வனுனைக் கண்டு

          நடுநடுங்கி மனம் வாடுமே - ஏங்கி

          நடுநடுங்கி மனம் வாடுமே



     ஏழைக் கமக்காரன் வேளைக் குதவிசெய்

          ஏவற்காரன் நீயே யென்னினும் - நல்ல

          ஏவற்காரன் நீயே யென்னினும்

     ஆளைப்போலப் போலி வேடக்காரன் நீயே

          ஆவதறிந்தன னுண்மையே - போலி

          ஆவதறிந்தன னுண்மையே



     தூரத்திலே யுனைக் கண்டவுட னஞ்சித்

          துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம் - மிகத்

          துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம்

     சேரச் சேரப் போலி வேடக்காரனென்று

          தெரிய வந்ததுன் வஞ்சகம் - நன்று

          தெரிய வந்ததுன் வஞ்சகம்



     சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைபோல்

          தேசத்திலே பலர் உண்டுகாண் - இந்தத்

          தேசத்திலே பலர் உண்டுகாண்

     அங்கவர் தம்மைக்கண் டேமாந்து போகா

          அறிவு படைத்தனன் இன்றுநான் - உன்னில்

          அறிவு படைத்தனன் இன்றுநான்.




வேண்டுகோள்:

இந்தப்பாடலில் விவரித்திருக்கும் வெருளியை யாரேனும் வரைந்து தந்தால் நன்றாகவிருக்கும்.


வெருளி செய்வதெப்படி? - http://www.powen.freeserve.co.uk/kids/scarecrow/scarecrow.htm

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.


posted by மதி கந்தசாமி (Mathy Kandasamy) at 3/07/2005 11:02:00 AM 15 comments


15 Comments:

Blogger சுந்தரவடிவேல் said...

எள்ளு விதைப்போமான்னு கேட்டா எண்ணெயோட வந்து நிக்கிறீங்களே:)

3/07/2005 01:51:00 PM  
Blogger -/பெயரிலி. said...

மதி பயனான செயல். சந்திரவதனா வைத்திருக்கும் சிறுவர் ஓவியப்பதிவுக்கும் ஓர் இணைப்பினைக் கொடுத்துவிடுங்களேன்.

3/08/2005 11:57:00 AM  
Anonymous Anonymous said...

Mathy!!!
Kalakkal effort...
Aanalum inthap paatai potathukkaaga..(Grrrr.)

3/08/2005 12:27:00 PM  
Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

Ramani,

I couldnt find any. :(

Can u give me the link Ramani? All i could find was http://kulanthaikal.blogspot.com/

Chandravathana,

if you read this, could u pls give me the link.

3/08/2005 12:32:00 PM  
Blogger -/பெயரிலி. said...

மதி தேடிப்பார்த்தேன்; காணவில்லை; சந்திரவதனாவிடமிருந்து இல்லாதுவிடில், சுவிஸ்லாந்திலிருந்து வந்திருக்கவேண்டுமென்று நினைக்கிறேன். பார்த்துச் சொல்கிறேன்.
கூடவே, ஓரளவுக்குச் சம்பந்தமுள்ளதாக,
துளிர்
http://thuzhir.blogspot.com/2005/02/blog-post.html

3/08/2005 01:04:00 PM  
Blogger Thangamani said...

//ஏழைக் கமக்காரன்// இது எப்படி சுந்தரின் பாட்டில் என்று யோசித்தபடி வந்தால் அதை எழுதியது மதி.

நல்ல பாடல். நன்றி.

3/08/2005 02:50:00 PM  
Blogger SnackDragon said...

பதிவு கலக்கல்!

3/08/2005 03:43:00 PM  
Blogger இராதாகிருஷ்ணன் said...

நேத்துத்தான் சொல்லிக்கிட்டு இருந்தீங்க, இப்ப அதுக்குள்ள ஒரு வலைப்பதிவா?!! படுவேகம் போங்க :)

3/08/2005 04:48:00 PM  
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

பயனுள்ள வேலை
பெயரிலி சொல்வது நளாயினி தாமரைச்செல்வன் அவர்களுடைய குழந்தைகள் பதிவென்று நினைக்கிறேன்
http://childrenworld.blogspot.com

3/08/2005 07:25:00 PM  
Blogger ஒரு பொடிச்சி said...

பாடல்களை படிக்க ஆசையாக இருக்கிறது!பயனுள்ள முயற்சி!

3/08/2005 08:53:00 PM  
Blogger -/பெயரிலி. said...

ஈழநாதன் பிடித்தார்; அதேதான்.

3/08/2005 09:44:00 PM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

வாழத்துக்கள் மதி. இவ்வளவு வேகமாக இருப்பீர்கள் என்று நான் நினைக்கவேயில்லை.

3/09/2005 04:42:00 PM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

This comment has been removed by a blog administrator.

3/09/2005 04:42:00 PM  
Anonymous Anonymous said...

அருமையான பாடல்.

11/23/2005 09:57:00 AM  
Anonymous Anonymous said...

Please visit tamilkids.tripod.com

7/14/2007 03:47:00 AM  

Post a Comment

<< Home


About

Links

Previous Posts

Credits

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது